எப்படி
இந்த நிலையில் டாஸ் வென்ற தோனியிடம் சிஎஸ்கே அணியின் பவுலிங் குறித்து கேட்கப்பட்டது. சிஎஸ்கே அணியின் பவுலிங் கடந்த போட்டியில் மோசமாக இருந்ததே , இந்த போட்டியில் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா என்று கேட்கப்பட்டது. ஆனால் தோனி இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலாக பதில் சொன்னார.
தோனி பேட்டி
தோனி அளித்த பேட்டியில், இன்று நாங்கள் நன்றாக பவுலிங் செய்வோம். ஒரு பவுலர் சூழ்நிலையை ஆராய்ந்து செயல்பட வேண்டும். கிரிக்கெட் என்பது மெண்டல் கேம். இதில் மனதைதான் அதிகம் பயன்படுத்த வேண்டும். இது மனம் சம்பந்தப்பட்டது. உடல் சம்பந்தப்பட்டது கிடையாது.
பழக்கம்
பிட்சுக்கு ஏற்றபடி தங்களை வீரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். இந்த பிட்ச் கொஞ்சம் டிரிக்காக இருக்கிறது. முதல் சில ஓவர்கள் மிக முக்கியமானதாக இருக்கும். பனி இப்போதே பெய்து வருகிறது. இரண்டாம் பாதியில் கண்டிப்பாக போட்டி மாறும், என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.
தோனி பேச்சு
தோனி இந்த பேட்டியில் சிஎஸ்கே பவுலர்கள் சொதப்பியது குறித்து பேசவில்லை. அவர்கள் எப்படி தங்களை மாற்றிக்கொண்டு உள்ளனர், பவுலர்களை ஏன் சிஎஸ்கே மாற்றவில்லை, என்று தோனி எதுவுமே கூறவில்லை.