மோசம்
சிஎஸ்கே அணியில் தற்போது மோசமாக இருக்கும் ஒரே விஷயம் தோனியின் பேட்டிங்தான். கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பின் தோனி சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. கடந்த 2020 ஐபிஎல் போட்டியில் ஒரே ஒரு மேட்சில் 44 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டியில் எல்லாம் சொதப்பினார்.
கடந்த மேட்ச்
கடந்த மேட்சிலும் மோசமாக ஆடிய தோனி இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். தோனி கடந்த இரண்டு வருடமாக பார்மில் இல்லை. தோனியின் இந்த மோசமான பார்ம் சிஎஸ்கே ரசிகர்களையும், அணி நிர்வாகிகளையும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த வருடமும் போன வருடம் போல ஆகிவிடுமோ என்று அஞ்ச தொடங்கி உள்ளனர்.
அச்சம்
அதோடு ஒரு கேப்டனாகவும் சிஎஸ்கே அணியில் தோனி சரியாக முடிவு எடுக்கவில்லை. நேற்று தோல்வி அடைய வேண்டிய போட்டியை கூட கேப்டன் ரோஹித் மீட்டு எடுத்தார். சஞ்சுவும் ஒரு கேப்டனாக ராஜஸ்தான் அணியை மீட்க கடைசி வரை போராடினார். ஆனால் முதல் போட்டியில் தோனி அப்படி எதுவும் செய்யவில்லை.
தோல்வி
தோல்வி அடைய போகிறோம் என்று தெரிந்ததும் தோனி மனசை விட்டுவிட்டார். பெரிதாக போராடாமல், பிளான் பியை கொண்டு வராமல் சொதப்பினார். தோனியின் கேப்டன்சி யூகிக்க கூடிய வகையில் உள்ளது. இதுவும் சிஎஸ்கே அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகி உள்ளது. இதை பற்றி பேன்ஸும் புலம்ப தொடங்கி உள்ளனர்.
மாற்றம்
சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இப்போதே.. இனிமே அணியில் மாற்றம் செய்யணும்னா தோனியைதான் நீக்கணும்.. அவர்தான் சரியில்லை. அவர் பார்மிற்கு வரணும். இல்லை இளைஞர்களுக்கு வழி விடணும் என்று கூற தொடங்கி உள்ளனர். ஆனால் தோனி மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என்கிறார்கள். மாறாக சரியாக பவுலிங் செய்த வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.