எப்படி
இந்த நிலையில் மும்பை வான்கடே பிட்ச் சிஎஸ்கேவிற்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. மும்பை பிட்ச் முன்பு முழுக்க முழுக்க பாஸ்ட் பவுலிங் - பேட்டிங் பிட்சாக இருந்தது. ஆனால் இதை சிஎஸ்கே அணி தற்போது தனக்கு சாதகமாக மாற்றியுள்ளது.
சாதகமாக மாற்றியுள்ளது
வான்கடே மைதானத்தை ஸ்லோ பால் மைதானமாக சிஎஸ்கே மாற்றி உள்ளது. பாஸ்ட் பாலுக்கு ஒத்துழைத்த வான்கடே மைதானத்தை சிஎஸ்கே அணியின் சாகர், ஷரத்துல் தாகூருக்கு ஒத்துழைக்கும் வகையில் சிஎஸ்கே அணி மாற்றியுள்ளது. இதுதான் தற்போது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
மும்பை
கடந்த போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக சிஎஸ்கே எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த இதுதான் காரணமாக இருந்தது. பிட்ச் ஸ்லோ பிட்சாக மாற்றப்பட்டதால் சாகர் எளிதாக ஸ்விங் செய்ய முடிந்தது. இவரின் ஸ்லோ ஸ்விங், ஸ்லோ பவுன்சர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த வாய்ப்பு ஏற்படுத்தியது.
தோனி
இந்த பிட்ச் மாற்றத்திற்கு பின் தோனிதான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. தோனி உத்தரவின் பெயரிலேயே மும்பை பிட்ச் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனால்தான் தற்போது சேப்பாக்கத்தை விட மும்பை பிட்சை சிஎஸ்கே வீரர்கள் அதிகம் விரும்ப தொடங்கி உள்ளனர்.