ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலமே இருப்பதால், அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்றுவிட்டன. இந்த தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் பரம எதிரிகள் போன்று பார்க்கப்படுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இது ஒருபுறம் இருக்க இந்தாண்டு ஐபிஎல் தொடரில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்றும் யார் கோப்பையை வெல்வார்கள் என்றும் எந்த வீரர் அதிக ஸ்கோர் அடித்து ஜொலிப்பார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் பாதி வரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.
கம்பீர் கணிப்பு
இந்நிலையில் இந்தாண்டு கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடுவார் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர்,
இந்த தொடரில் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். ஆனாலும் இதுவரை அவரிடமிருந்து அவருடைய பெஸ்ட்டை நாம் பார்க்கவில்லை. ஆர்சிபி வீரர் விராட்கோலி 2016ஆம் ஆண்டு 973 ரன்களைக் குவித்தது போல கே.எல்.ராகுலும் நிச்சயம் ஒரு அருமையான சீசனை விளையாட முடியும். அதுமட்டுமின்றி ஒரே சீசனில் 2-3 சதங்களை அவரால் நிச்சயம் அடிக்க முடியும் எனக்கூறியுள்ளார்.
இளம் பட்டாளம்
இந்த தொடரில் பஞ்சாப் அணி நிறைய மாற்றங்களை செய்து வந்தாலும் பெரும் அளவில் சொதப்பி வருகின்றன. தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 6வது இடத்தில் உள்ளது. இளம் வீரர்களை அதிகம் வைத்துள்ள இந்த அணி 2வது பாதி தொடரிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.