ஹர்ஷல் பட்டேல்
இந்த தொடரில் இன்னொரு பக்கம் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் கவனம் ஈர்த்தார். தொடரின் தொடக்கத்தில் இவர் ஆர்சிபி அணிக்கு சிறப்பாக பவுலிங் செய்தார். முக்கியமாக டெத் ஓவர்களில் ஹர்ஷல் பட்டேல் கவனம் ஈர்த்தார்.
டெத் ஓவர்கள்
டெத் ஓவர்களில் ஸ்லோ பால் வீசுவது, யார்க்கர் வீசுவது என்று நன்றாகவே ஆடினார். இதனால் ஒருவேளை இவர் நடராஜனுக்கு மாற்றாக வருவாரோ என்று கேள்விகள் எழுந்தன. நடராஜன் காயத்தில் இருப்பதால் இந்திய அணியில் ஹர்ஷல் பட்டேல் இடம்பெறுவாரோ என்று கேள்விகள் எழுந்தன. அதோடு கோலிக்கும் இவர் நெருக்கமாக இருக்கிறார்.
நெருக்கம்
ஆனால் இவரின் யார்க்கர் கணிக்கும் வகையிலேயே இருந்தது. முக்கியமாக இவரின் ஸ்லோ பால் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த நிலையில் முதலில் நன்றாக பவுலிங் செய்த ஹர்ஷல் தற்போது சொதப்ப தொடங்கி உள்ளார். பேட்ஸ்மேன்கள் இவரை எளிதாக கணித்து ஆட தொடங்கி உள்ளனர். முக்கியமாக இவரின் டெத் ஓவர் பவுலிங்கை எளிதாக அடிக்க தொடங்கி உள்னனர்.
கணிப்பு
இவரின் ஓவரில்தான் ஜடேஜா 36 ரன்களை அடித்தார். அன்று ஆர்சிபி தோல்வி அடைய இவர்தான் முக்கிய காரணம். அதேபோல் நேற்றும் இவர் 4 ஓவர் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 53 ரன்கள் கொடுத்தார். நேற்று பெங்களூர் அணியில் அதிக ரன்கள் கொடுத்தது இவர்தான்.
எப்படி
வந்த புதிதில் இவரின் பவுலிங்கை கணிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால் தற்போது இவரின் டெக்னிக் தெரிந்துவிட்டதால் எளிதாக ரன்களை கொடுக்கிறார். நீண்ட நாட்களுக்கு இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்ய வாய்ப்பு இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூற தொடங்கி உள்ளனர்.