பஞ்சாப்
அதிலும் பஞ்சாப் அணி அதிகம் நம்பி, பெரிய தொகை கொடுத்து எடுத்த வீரர்கள் இருவரும் நேற்று சரியாக பவுலிங் செய்யவில்லை. பஞ்சாப் அணி இந்த சீசனில் ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் ரைலி மெரிடித் இருவரையும் அதிகம் நம்பியது. தங்கள் அணியின் டாப் பவுலர்களாக இவர்கள் இருப்பார்கள் என்று நம்பியது.
ஆனால்
இதில் ஜெய் ரிச்சர்ட்சன் பஞ்சாப் அணி மூலம் 14 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். இவர் பிபிஎல் போட்டியில் பெர்த் அணிக்காக ஆடி வருகிறார். இன்னொரு பக்கம் ரைலி மெரிடித் பஞ்சாப் அணியால் 8 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டார். இவர் பிபிஎல் தொடரில் ஹோபர்ட் அணிக்காக ஆடி வருகிறார்.
மோசம்
பிபிஎல் போட்டிகளில் இவர்கள் சிறப்பாக ஆடியதை வைத்து, பஞ்சாப் அணி இவர்களை ஏலம் எடுத்தது. ஆனால் பிபிஎல் போல இல்லாமல், ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பி வருகிறார்கள். நேற்று நடந்த போட்டியில் 4 ஓவர் வீசிய ஜெய் ரிச்சர்ட்ஸன் 55 ரன்கள் கொடுத்து வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இவரின் லைன், லென்த் எதுவும் சரியாக இல்லை.
இது பவுலிங்கா
இன்னொரு பக்கம் ரைலி 4 ஓவர் போட்டு 49 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இரண்டு பேருமே நேற்று அதிக அளவில் ரன்களை வாரி வழங்கினார்கள். பெரிய அளவில் வேகமாகவும் வீசவில்லை, பவுலிங்கில் வேரியேஷன் இல்லை. ஆனால் குறைந்த விலைக்கு எடுக்கப்பட்ட அர்ஷிதீப் சிங், சக்காரியா போன்றவர்கள் நேற்று சிறப்பாக பவுலிங் செய்தனர்.
சந்தேகம்
பிரீத்தி ஜிந்தா வெளிநாட்டு வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து, முக்கியமாக பிபிஎல் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து ஏலம் எடுத்தார். ஆனால் பிரீத்தி ஜிந்தா நம்பிய இரண்டு வீரர்களும் நேற்று மோசமாக சொதப்பி உள்ளனர். பல கோடிகளை அள்ளிக்கொடுத்து இவர்களை ஏலம் எடுத்தது பஞ்சாப் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.