பேட்டிங்
இதில் மும்பை பேட்டிங் செய்து பொதுவாக 140-150 ரன்களை எடுக்கும். பின்னர் ஸ்பின் பவுலர்களை வைத்து மும்பை அணி 150 ரன்களை கூட டிஃபன்ட் செய்து வெற்றிபெறும். கொல்கத்தா, ஹைதாபாத் அணிகளை மும்பை அணி இப்படித்தான் சேப்பாக்கம் பிட்சில் வீழ்த்தியது. முக்கியமாக மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை வைத்து மும்பை விக்கெட்டுகளை எடுக்கும்.
அனுமதிக்கவில்லை
ஆனால் நேற்று மும்பையின் இந்த பிளானை டெல்லி கேப்டன் எளிதாக காலி செய்து விட்டார். மும்பை டாஸ் வென்று பேட்டிங் செய்தவுடன் முடிந்த அளவு அந்த அணியை குறைவான ரன்னில் சுருட்ட முடிவு செய்துவிட்டார். சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால் அதை பயன்படுத்தி முழுக்க முழுக்க ஸ்பின் பவுலர்களை களமிறக்கி மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.
அழுத்தம்
முக்கியமாக அமித் மிஸ்ராவிற்கு இந்த பிட்சில் பவுலிங் செய்த அனுபவம் இருக்கிறது என்பதால், தொடர்ந்து அவரை பவுலிங் செய்ய வைத்தார். இங்குதான் மும்பை அணியின் பிளான் காலியானது. 150 அடித்ததால் தானே டிஃபன்ட் செய்வீர்கள் என்று முடிந்த அளவு 130க்குள் சுருட்ட பண்ட் நினைத்தார். அதற்கு ஏற்றபடி அமித் மிஸ்ராவும் 4 விக்கெட்டுகளை எடுத்து மும்பையை காலி செய்தார்.
எத்தனை
மும்பை வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பண்ட் மீண்டும் ஸ்மார்ட் முடிவு எடுத்தார். ஸ்மித், தவான் இருவரையும் அடித்து ஆடி அவுட்டாக சொல்லாமல் நிதானமாக ஆட சொன்னார். இரண்டு பேருமே 100 ஸ்டிரைக் ரேட் வைத்தே ஆடினார்கள். அதோடு ஸ்மித் அவுட்டான பின் அதிரடி வீரர்களை இறக்காமல் லலித்தை இறக்கினார். இவர் நிதானமாக ஆட கூடியவர்.
ஸ்டிரைக்
இவர் வந்த பின் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ரன் குறையாமல் அதே சமயம் விக்கெட்டும் விழாமல் பார்த்துக்கொண்டார். முன்பு கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் இப்படி செய்யவில்லை. அவசரப்பட்டு ஆடி அந்த அணிகள் தோல்வி அடைந்தன. ஆனால் பண்ட் அதற்கு இடம் கொடுக்காமல், பிளானை மாற்றி, லலித்தை முன்பே இறக்கிவிட்டு விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தினார்.
கேப்டன்
நேற்று பண்டின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. இதனால்தான் வரிசையாக வென்று வந்த மும்பை நேற்று தோல்வி அடைந்தது. நேற்று பண்ட் புத்திசாலித்தனமாக எடுத்த முடிவுகளால் மும்பை அணி கொஞ்சம் களத்தில் ஆடிப்போய் இருந்தது.