பும்ரா
நேற்று குர்னால் பாண்டியா ஓவரில் ரசல் இரண்டு முறை அவுட் ஆகாமல் தப்பித்தார். முதல் முறை ரசல் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் அதை மிஸ் செய்தார். அதன்பின் மீண்டும் அதே ஓவரில் ரசல் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் பும்ரா மிஸ் செய்தார். இந்த கேட்சை மிஸ் செய்த பும்ரா கடும் விரக்தியில் இருந்தார்.
விரக்தி
ச்சா ரசலின் கேட்சை போய் விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் பும்ரா இருந்தார். அதேபோல் பும்ரா வீசிய 17வது ஓவரும் கொஞ்சம் மோசமாக இருந்தது. 15, 16 ஓவர்களில் மும்பை ரன்களை கட்டுப்படுத்திய நிலையில் 17வது ஓவரில் பும்ரா நோ பால் வீசினார். அடுத்த பாலே பவுண்டரியும் கொடுத்தார்.
வருத்தம்
இந்த ஓவரில் 8 ரன்கள் சென்ற நிலையில் பும்ரா மிகவும் வருத்தமாக காணப்பட்டார். பீல்டிங் நிற்கும் போது தரையை காலை தட்டிய படியே மிகவும் வருத்தமாக காணப்பட்டார். ச்சா இப்படி தவறு செய்துவிட்டோமே என்று வருந்தினார். இவர் பவுலிங் செய்த விதத்தை பார்த்த ரோஹித்தும்.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று நேராக சென்று கேட்டு.. நீண்ட நேரம் அட்வைஸ் கொடுத்தார்.
அட்வைஸ்
ரோஹித் கொடுத்த அட்வைசுக்கு பின் மனம் மாறிய பும்ரா அடுத்த ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார். 19வது ஓவரில் பும்ரா வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். உண்மையில் இந்த ஓவர்தான் திருப்பு முனையாக இருந்தது. இந்த ஓவரில் ரன் செல்வதை பும்ரா கட்டுப்படுத்தினர். இதுதான் கேம் சேஞ்சராக அமைந்தது.
சிறப்பு
ரோஹித் சர்மா நேற்று பும்ரா தொடங்கி பவுலர்கள் எல்லோரையும் கையாண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. பவுலர்களை சரியான நேரத்தில் அனுப்பியது. அவர்களுக்கு சரியான அறிவுரைகளை வழங்கியது என்று ரோஹித் சிறப்பாக செயல்பட்டார். நேற்று பும்ரா மீண்டும் பார்மிற்கு வந்து, நல்ல ஓவர் வீசவும் ரோஹித்தே காரணமாக இருந்தார்.