விக்கெட்
பொதுவாக நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவரும் ரன் கொடுக்க மாட்டார்கள். ரன் செல்வதை முக்கியமான நேரத்தில் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் இன்று நடராஜன், புவனேஷ்வர் குமார் என்று எல்லோரின் ஓவரிலும் ராணா - ராகுல் அடித்து வெளுத்தனர். பாரபட்சம் இன்றி எல்லோரின் ஓவரில் ரன் சென்றது.
ரன் சென்றது
நடராஜன் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்தார். அதேபோல் புவேனஸ்வர் குமாரும் 9 ரன்களுக்கு மேல் கொடுத்தார். விஜய் சங்கர் 14 ரன்களுக்கும் அதிகமாகவும், சந்திப் சர்மா 11 ரன்களுக்கு அதிகமாகவும் கொடுத்தனர். ரஷீத் கான் மட்டுமே சிறப்பாக பவுலிங் செய்து 6 ரன் ரேட் வைத்து இருந்தார்.
விக்கெட் எடுத்தார்
அதோடு கில், ரசல் விக்கெட்டையும் இவர் எடுத்தார். இன்று போட்டியில் ராணா - ராகுல் விக்கெட்டை எடுக்க முடியாமல் ஹைதராபாத் பவுலர்கள் திணறினார்கள். ஆனால் நடராஜன் முக்கியமான கட்டத்தில் பிரேக் கொடுத்தார். ராகுல் பேட்டிங் செய்த போது பந்தை சுற்றி வீசி, ஸ்லோவாக எறிந்தார்.
அவுட்
யார்க்கர் போடாமல் ஸ்லோவாக வீசினார் நடராஜன். இதை கணிக்க முடியாமல் ராகுல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராகுல் - ராணா ஜோடி அதிரடியாக ஆடி வந்த நிலையில் நடராஜன் தனது ஸ்மார்ட் பிளான் மூலம் இந்த இணையை பிரித்தார். இதுதான் திருப்பு முனையாக இருந்தது. இதன் பின் ரசல், ராணா என்று வரிசையாக கொல்கத்தா வீரர்கள் அவுட் ஆனார்கள்.