கஷ்டம்
இந்த நிலையில் சிஎஸ்கே அடுத்தடுத்த போட்டிகளில் வரிசையாக "கடப்பாரை" அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. 16ம் தேதி நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி பஞ்சாப்பை எதிர்கொள்ள உள்ளது. அதற்கு அடுத்து 19ம் தேதி நடக்கும் போட்டியில் ராஜஸ்தானை சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ளது.
எங்கே
இந்த இரண்டு போட்டியும் மும்பை பிட்சில் நடக்க உள்ளது. மும்பை பிட்ச் பேட்டிங் பிட்ச் ஆகும். இங்குதான் நேற்று பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 221 ரன்கள் எடுத்தது. அதோடு ராஜஸ்தான் அணி 217 ரன்கள் வரை சேஸிங்கில் எடுத்தது.
சேசிங்
இந்த இரண்டு அணியையும்தான் அடுத்தடுத்து சிஎஸ்கே இதே மும்பை பிட்சில் எதிர்கொள்ள போகிறது. இந்த பிட்சில் சிஎஸ்கே சார்பாக அதிரடியாக பவுலிங் செய்ய சிறப்பான வீரர்கள் யாரும் இல்லை. ராஜஸ்தான், பஞ்சாப் அணியில் நல்ல பாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டு பவுலர்கள், உள்நாட்டு பவுலர்கள் என்று சிறப்பான பாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள்.
மோசம்
இப்படி இருந்தும் கூட நேற்று போட்டியில் 210 ரன்களுக்கு மேல் இரண்டு அணிகளும் எடுத்தது. ஆனால் சிஎஸ்கே அணியிடம் இப்படி பாஸ்ட் பவுலர்கள் இல்லை, ஷரத்துல் தாக்கூர், சாகர் அவ்வளவு வேகமாக வீச மாட்டார்கள். லுங்கி நிகிடி, பெஹன்டிராப் இன்னும் அணியில் இணையவில்லை. முக்கிய பவுலர்கள் சரியாக வீசுவது இல்லை.
கஷ்டம்
இந்த மோசமான பவுலிங் ஆர்டரை வைத்துக்கொண்டுதான் சிஎஸ்கே அணி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணியையே சிஎஸ்கே சமாளிக்க முடியவில்லை. இதனால் அடுத்தடுத்து போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெறுவது பெரிய கஷ்டமாகி உள்ளது.