எப்படி
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்களில் சாம் கரன், மொயின் அலி, டு பிளசிஸ் ஆகியோர் ஆடுவது உறுதியாகிவிட்டது. இது போக பிராவோ ஆடுவதும் உறுதியாகிவிட்டது. இதனால் 4 வெளிநாட்டு வீரர்களின் கோட்டா ஓவர்.
மீதம்
மீதம் உள்ள 8 பேரில் ஓப்பனிங் வீரர்களாக உத்தப்பா, ரூத்துராஜ் களமிறங்குவார்கள். அதன்பின் ரெய்னா, டு பிளசிஸ், தோனி களமிறங்குவார்கள். இன்னும் 2 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஜடேஜா ஆடுவது உறுதியாகிவிட்டது. அதன்பின் ஷரத்துல், அல்லது சாகரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
யார்
ஸ்பின் செய்ய ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் உள்ளனர். பாஸ்ட் பவுலிங்கிற்கு ஷரத்துல் (அல்லது சாகர்), பிராவோ, சாம் கரன் ஆகியோர் உள்ளனர். ரெய்னா கூடுதலாக இன்னொரு ஸ்பின் பவுலராக இருப்பார் . இதனால் மிக முக்கியமான வீரரான அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.
ரெய்னா
ரெய்னா, உத்தப்பாவின் வருகையால் அம்பதி ராயுடு ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ராபின் உத்தப்பா முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் ராயுடு அப்படி ஆடவில்லை. இதனால் இவரை மொத்தமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் ஓரம்கட்டும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிராவோ
அதேபோல் பிராவோவும் சில போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.பிராவோவிற்கு பதிலாக முழு பாஸ்ட் பவுலர் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் கிருஷ்ணப்ப கவுதமும் ஆடும் அணியில் இடம்பெறுவது கஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.