பிட்னஸ்
அதன்பின் இங்கிலாந்து தொடருக்கும் வருண் தேர்வானார். ஆனால் பிட்னஸ் டெஸ்டில் இவர் பெங்களூரில் தோல்வி அடைந்தார். யோ யோ டெஸ்டில் ஓட முடியாமல் இவர் தோல்வியை தழுவினார். இதன் காரணமாக இந்திய அணியில் இவருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மீண்டும்
இந்திய அணியில் ஆட பிட்டாக இருக்க வேண்டும். நன்றாக ஆடினால் மட்டும் வாய்ப்பு கிடைக்காது. வேகமாக ஓடுவது தொடங்கி பீல்டிங் வரை அனைத்திலும் பிட்டாக இருக்க வேண்டும் என்று கோலியே வருண் சக்ரவர்த்தி குறித்து விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.
நிலைமை
இந்த நிலையில்தான் நேற்று வேகமாக ஓட முடியாமல் வருண் ரன் அவுட் ஆனது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் வருண் ரன் அவுட் ஆனார். வேகமாக ஓட முடியாமல், மைதானத்தில் இவர் ஜாக்கிங் செய்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
ஸ்லோ
மிக மெதுவாக இவர் ஓடியதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். வருண் நல்ல பவுலர், ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் பிட்னஸ் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த வேகத்தில் எல்லாம் ஓடினால் கண்டிப்பாக இந்திய அணியில் வாய்ப்பு பெற முடியாது என்று தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.