ஐபிஎல்
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வீரர்களின் பயணத்தை குறைக்க இந்தாண்டு குறைந்த அளவிலான மைதானங்களே ஐபிஎல்-க்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் மும்பையில் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்கள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்ப்பு
இதுகுறித்து காங். எம்.எல்.சி,பிரகாஷ் ரத்தோட், கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உலகில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. திறந்த வெளிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதை கண்களால் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகள் அவசியம் தானா, பபுள்களுக்குள் வீரர்களை வைத்திருப்பது அவர்களின் மனநிலையை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
பெங்களுரூ மைதானம்
இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிப்புகளை கொண்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. பெங்களூரு சின்னச்சாமி மைதானம் நகரத்தின் மையத்தில் உள்ளது. எனவே அங்கு ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவிட்டு, கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள்
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியானது வரும் மே 9ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. கடைசி போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே மே 22ம் தேதி நடைபெறவுள்ளது.