For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்ணே கலங்கிடுச்சு.. பாவம்.. போட்டிக்கு நடுவே கோலிக்கு நடந்த சம்பவம்.. இரவோடு இரவாக அவசர சோதனை!

சென்னை: நேற்று பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்று ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஏபிடி வில்லியர்ஸ் காட்டிய அதிரடியால் பெங்களூர் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி பந்தில் சிங்கிள் அடித்து, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வென்றது.

எப்படி

எப்படி

இந்த போட்டி முதலில் மும்பை வசமே இருந்தது. முதல் 10 ஓவரில் மும்பை அணி 90+ ரன்கள் எடுத்து இருந்தனர். ஆனால் அதன்பின் மோசமான ஆட்டத்தால் திணறிய மும்பை அணி 159 ரன்களுக்கு சுருண்டது. இதில் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் அதிரடியாக பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

சிறப்பு

சிறப்பு

இன்னொரு பக்கம் பெங்களூர் அணி இரண்டாவது பேட்டிங் இறங்கி கொஞ்சம் திணறியது. சுந்தர். படிடார் அவுட்டாக கோலி, மேக்ஸ்வெல் மட்டுமே கொஞ்சம் அதிரடியாக ஆடினார்கள். அவர்களும் அவுட்டான பின் ஆட்டம் மும்பை வசம் சென்றது. ஆனால் கடைசியில் ஏபிடி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியை வெற்றிபெற வைத்தார்.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் குர்ணால் பாண்டியா பேட்டிங் செய்த போது, கைலி ஜாமிசன் ஓவரில் அவர் அடித்த பந்து ஒன்று நேராக கோலிக்கு கேட்ச் சென்றது. முகத்தை நோக்கி வந்த பந்தை கோலி கணிக்க தவறினார். பந்து கோலியின் கையில் வேகமாக பட்டு, கண்ணுக்கு கீழே அடித்தது. இதில் அவரின் கண் கலங்கி போனது.

கலங்கிவிட்டார்

கலங்கிவிட்டார்

வேகமாக வந்து பந்து பட்டதில், கோலியின் கண்ணுக்கு கீழ் பெரிதாக வீங்கி, சிவந்து போனது,. ஒரு நொடி அவரின் கண் மொத்தமாக கலங்கி, நிலைகுலைந்து போனார். பின் சுதாரித்துக் கொண்ட அவர் தொடர்ந்து பீல்டிங் செய்தார். நேற்று இவரின் கண்ணில் பிரச்சனை எதுவும் இல்லை.

சோதனை

சோதனை

ஆனாலும் பாதுகாப்பு கருதி நேற்று இவரின் கண்கள் சோதனை செய்யப்பட்டன. பந்து அடித்ததில் கண்ணுக்கு எதுவும் பாதிப்பா என்று இரவோடு இரவாக சோதனை செய்யப்பட்டது. கோலியின் கண்ணுக்கு பாதிப்பு இல்லை, கண்ணுக்கு கீழ் கன்னம் அருகே லேசான ரத்த கட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, April 10, 2021, 8:24 [IST]
Other articles published on Apr 10, 2021
English summary
IPL 2021: Kohli injured under eyes after getting hit by a ball in RCB vs MI match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X