எப்படி
இந்த போட்டி முதலில் மும்பை வசமே இருந்தது. முதல் 10 ஓவரில் மும்பை அணி 90+ ரன்கள் எடுத்து இருந்தனர். ஆனால் அதன்பின் மோசமான ஆட்டத்தால் திணறிய மும்பை அணி 159 ரன்களுக்கு சுருண்டது. இதில் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் அதிரடியாக பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
சிறப்பு
இன்னொரு பக்கம் பெங்களூர் அணி இரண்டாவது பேட்டிங் இறங்கி கொஞ்சம் திணறியது. சுந்தர். படிடார் அவுட்டாக கோலி, மேக்ஸ்வெல் மட்டுமே கொஞ்சம் அதிரடியாக ஆடினார்கள். அவர்களும் அவுட்டான பின் ஆட்டம் மும்பை வசம் சென்றது. ஆனால் கடைசியில் ஏபிடி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியை வெற்றிபெற வைத்தார்.
வெற்றி
இந்த போட்டியில் குர்ணால் பாண்டியா பேட்டிங் செய்த போது, கைலி ஜாமிசன் ஓவரில் அவர் அடித்த பந்து ஒன்று நேராக கோலிக்கு கேட்ச் சென்றது. முகத்தை நோக்கி வந்த பந்தை கோலி கணிக்க தவறினார். பந்து கோலியின் கையில் வேகமாக பட்டு, கண்ணுக்கு கீழே அடித்தது. இதில் அவரின் கண் கலங்கி போனது.
கலங்கிவிட்டார்
வேகமாக வந்து பந்து பட்டதில், கோலியின் கண்ணுக்கு கீழ் பெரிதாக வீங்கி, சிவந்து போனது,. ஒரு நொடி அவரின் கண் மொத்தமாக கலங்கி, நிலைகுலைந்து போனார். பின் சுதாரித்துக் கொண்ட அவர் தொடர்ந்து பீல்டிங் செய்தார். நேற்று இவரின் கண்ணில் பிரச்சனை எதுவும் இல்லை.
சோதனை
ஆனாலும் பாதுகாப்பு கருதி நேற்று இவரின் கண்கள் சோதனை செய்யப்பட்டன. பந்து அடித்ததில் கண்ணுக்கு எதுவும் பாதிப்பா என்று இரவோடு இரவாக சோதனை செய்யப்பட்டது. கோலியின் கண்ணுக்கு பாதிப்பு இல்லை, கண்ணுக்கு கீழ் கன்னம் அருகே லேசான ரத்த கட்டு இருப்பதாக கூறப்படுகிறது.