சிஎஸ்கே
சிஎஸ்கே அணி நேற்று தோல்வி அடைய முக்கியமான காரணம், அணியில் நல்ல பாஸ்ட் பவுலர்கள் இல்லை. டிரெண்ட் போல்ட், ஹஸல்வுட் போன்ற பாஸ்ட் பவுலர்கள் சிஎஸ்கேவில் இல்லை. ஹஸல்வுட் இந்த முறை ஐபிஎல் ஆடவில்லை என்று கூறி வெளியேறிவிட்டார். இது சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக மாறியது.
பின்னடைவு
இதனால் இருக்கிற வீரர்களை வைத்து சிஎஸ்கே நேற்று பவுலிங்கை சமாளித்தது. தற்போது சிஎஸ்கே வசம் வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்களில் சாம் கரன், பிராவோ மட்டுமே உள்ளனர். இரண்டு பேருமே மீடியம் பாஸ்ட் பவுலர்கள்தான்.
சிக்கல்
அடுத்த போட்டியில் சிஎஸ்கேவில் பெஹன்டிராப், லுங்கி நிகிடி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் இந்த வாரம்தான் சிஎஸ்கே அணியில் இணைவார்கள்.
பெஹன்டிராப்
அதிலும் பெஹன்டிராப் சிஎஸ்கேவில் இணைய சில நாட்கள் தாமதம் ஆகும். அதன்பின் கொரோனாவிற்காக தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். இதனால் இவர் இருவரும் அடுத்த போட்டியில் ஆட மாட்டார்கள்.
வாய்ப்பு இல்லை
இவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் சிஎஸ்கேவில் ஆட வாய்ப்பு இல்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இருக்கிற பவுலர்களை வைத்து சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார். அடுத்த போட்டியிலும் சாகர், தாக்கூர் ஆகிய பாஸ்ட் பவுலரை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.