பிட்ச் ரிப்போர்ட்
முதல் போட்டியானது சென்னை MA சிதம்பரம் மைதானத்தில் 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த பிட்ச்சானது பேட்ஸ்மேன்களுக்கு சிறிது சிரமான ஒன்றே ஆகும். ஏனென்றால் ஸ்பின்னர்களுக்கு மிகவும் கைக்கொடுக்கூடிய பிட்ச் இது. இதனால் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 ரன்கள் எடுத்தாலே ஓரளவிற்கு வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது.
மும்பை அணி
ரோகித் சர்மா ( கேப்டன்) , கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ( கீப்பர்) , கெயிரின் பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, நாதன் கோல்டர் நை/ பியூஸ் சாவ்லா, ராகுல் சஹார். ட்ரெண்ட் போல்ட், பும்ரா,
பெங்களூரு அணி
தேவ்தத் பட்டிக்கல், விராட் கோலி ( கேப்டன்) டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ராஜட் பட்டிதர்/ முகமது அசாருதீன், சச்சின் பேபி/ சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் கிரிஸ்டியன், வாசிங்டன் சுந்தர், கெயில் ஜேமிசன்/ கேன் ரிச்சர்ட்சன், முகமது சிராஜ், யுவேந்திர சஹால்
கணிப்பு
விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் பல வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் அணி இன்னும் செட்டில் ஆகவில்லை. சிறப்பான அயல் நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள போது அவர்கள் ஐபிஎல் அனுபவம் இல்லாத வீரர்கள். ஆனால் நடப்பு சாம்பியனான மும்பை அணியில் கடந்த முறை இருந்த வீரர்கள் செட்டிலாகி இன்னும் அணியில் உள்ளனர். எனவே மும்பை அணியை எதிர்கொள்ள ஆர்சிபி சற்று திணறும் என்பதால் மும்பைக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.