சிஎஸ்கே மீது விமர்சனம்
தோனி தலைமையிலான சென்னை அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடியது. 12 புள்ளிகளை மட்டுமே பெற்று ப்ளே ஆப்-க்குள் கூட செல்ல முடியாமல் வெளியேறியது. இதனால் தோனி மீதும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
கம்பேக் கொடுத்தது
ஆனால் தற்போது சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், அடுத்த 2 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணியை அசால்ட்டாக வென்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2வது இடம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், சிஎஸ்கே அணிக்கு கடந்தாண்டு சரியாக அமையவில்லை. எனினும் இந்தாண்டு இந்தியாவில் சிறப்பாக ஆடுகிறது. இதனால் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணியுடன் முதல் இடத்தில் ஆர்சிபி, 3வது மும்பை மற்றும் 4வது இடத்தில் டெல்லி அணி உள்ளது.
வாகன் எச்சரிக்கை
சென்னை அணியின் இந்த கம்பேக் மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4ல் மீதமுள்ள 3 அணிகளில் நான் இருந்திருந்தால் இதனை தான் நினைத்திருப்பேன். எனவே மற்ற அணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வலுவான அணி
சிஎஸ்கே அணியில் கடந்தாண்டு பேட்டிங் செயல்பாடு சிறப்பாக இல்லை. பந்தை தின்றுவிட்டு எந்த வீரரும் ரன் எடுக்காமல் சென்றனர். ஆனால் இந்த முறை ரெய்னாவின் கம்பேக், மொயின் அலி வருகை அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்த்துள்ளது. அதே போல சென்னை அணியின் பலமாக பார்க்கப்படும் சுழற்பந்துவீச்சு நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. எனவே சிஎஸ்கே கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.