அரை சதம்
சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக டுப்ளசிஸ் மற்றும் ருத்ராஜ் கெயிக்வாட்டின் அதிரடி இருந்தது. குறிப்பாக தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் மீண்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அவர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும்.
தொடக்கம்
இவரின் அதிரடியால் சென்னை அணி பவர் ப்ளேவில் 54 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய கெயிக்வாட் 64 ரன்கள் அடித்திருந்த போது, பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். 42 பந்துகளை சந்தித்த அவர் 64 ரன்கள் அடித்தார். இதில் 4 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
விமர்சனங்கள்
இவரின் ஆட்டம் குறித்து கேப்டன் தோனி ஸ்பெஷலாக பாராட்டியுள்ளார். ருத்ராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது குறித்து பேசிய அவர், கடந்த ஐபிஎல்-ல் ருத்ராஜ் கிளாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடியுள்ளார். அவரின் மனநிலையை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் போட்டியை முடித்து வந்த பிறகு. இன்று எப்படி உணருகிறீர்கள் என கேட்பேன். அதற்கு அவர் அவரிடம் இருந்து வரும் ரியாக்ஷனிலும், அவர் கண்களிலும் இருந்து நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம், அவர் தளர்ந்து போகவில்லை என்று. இந்த மனோத்தத்துவ முறையையே நான் என் வாழ்வில் கடைபிடித்து வருகிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர் விமர்சனங்கள்
நேற்றைய போட்டியில் ருத்ராஜ் கெயிக்வாட்டை அணியில் சேர்க்கவே கூடாது என ரசிகர்களும், வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். ஏனென்றால் இந்த சீசனில் இதற்கு முன்னர் ஆடிய 3 போட்டிகளிலும் ருத்ராஜ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3 போட்டிகளில் 5, 5, 10 என்ற ரன்களே எடுத்திருந்தார். இதனால் சென்னை அணியின் ஓப்பனிங் தடுமாறியது. ஆனால் தோனி தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.