ரசிகர்கள் வருத்தம்
இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் பங்கேற்றது என்பது எனது நீண்ட பயணம் ஆகும். இந்த நீண்ட கால பயணத்தால் எனக்கு சற்று வயதாகிவிட்டது போன்று உணர்கிறேன். ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா, துபாய், சென்னை சிஎஸ்கேவுடன் எனது பயணம் தொடங்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை, நாங்கள் மும்பையில் விளையாடுவோம் என எதிர்பார்க்கவில்லை.
சென்னை பிட்ச் சரியில்லை
சென்னை அணியின் ஹோம் மைதானமான சேப்பாக்கம் பிட்ச் கடந்த 2011ம் ஆண்டு மட்டுமே எங்களுக்கு நன்றாக இருந்தது. அதன் பிறகு மறுவடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள பிட்ச் எங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தவில்லை. ஆனால், மும்பை ஆடுகளம் சிறப்பாக உள்ளது. பந்து அதிகமாக ஸ்விங் ஆகவில்லை, பனிப்பொழிவு இல்லாததால், பந்தில் நல்ல வேகம் உள்ளது.
தோனி பாராட்டு
சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹர் சிறந்த டெத் ஓவர் பவுலராக உருமாறியுள்ளார், எனக்கு அட்டாக்கிங் பவுலிங் தேவை என்ற சூழல் வரும் போது சஹாரை பயன்படுத்தினேன். ஏனென்றால் அவர் அந்த பிட்ச்சில் நன்கு வீசக்கூடியவர். டெத் பவுலிங்கை பிராவோ சிறப்பாக வீசுவார் என்பதால்தான், தீபக் சஹருக்கு முன்கூட்டியே 4 ஓவர்களையும் முடித்துவிட்டேன். ஆனால் அவர் முன்கூட்டியே கொடுக்கப்பட்ட 4 ஓவர்களையும் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
அசத்தும் மொயின் அலி
நேற்றைய போட்டியில் 46 ரன்கள் அடித்து உதவிய மொயின் அலி குறித்து பேசிய தோனி, மொயின் அலியை தொடக்க வரிசையில் பேட் செய்ய வைக்க வேண்டும் என முடிவெடுத்தோம். எங்களுக்கு கிடைத்த வீரர்களை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறோம். பந்தை சரியான டைமிங்கில் அடித்துவிடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன், வலுவான ஷாட்களை ஆடக்கூடியவர் மொயின் அலி என தோனி தெரிவித்தார்.