சிறப்பு
தற்போது இந்திய அணியில் உலகக் கோப்பை டி 20 அணியில் ஆட வேண்டும் என்று நடராஜன் முயன்று வருகிறார். ஐபிஎல் தொடரில் மீண்டும் ஹைதராபாத் அணியில் ஆடி வருகிறார். 2021 ஐபிஎல் தொடரில் இளம் பவுலர்கள் பலர் சிறப்பாக பந்து வீசுவதால் நடராஜன் தனது ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
எப்படி
இந்த தொடரில் பல புதிய வீரர்கள் சிறப்பாக ஆட தொடங்கி உள்ளனர். கொல்கத்தா அணியில் ஆடும் பிரஷித் கிருஷ்ணா சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இவர் நன்றாக பவுலிங் செய்தார். அதேபோல் நேற்று சக்காரியா நன்றாக பவுலிங் செய்தார். இவர் ராஜஸ்தான் அணியில் ஆடி வருகிறார்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் அணியின் சேட்டன் சக்காரியா நேற்று அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட் எடுத்து, 7 ரன் ரேட் வைத்து இருந்தார். ஸ்லோ பால் யார்க்கர் முதல் பவுன்சர் வரை துல்லியமாக வீசினார். அதேபோல் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக டெத் ஓவர்களில் பவுலிங் செய்தார். இளம் இந்திய பவுலர்கள் பலர் சிறப்பாக வீசுகிறார்கள்.
வேறு யார்
இதுபோக ஐபிஎல்லில் பும்ராவும் பார்மிற்கு வந்துவிட்டார். பாண்டியாவும் பவுலிங் போட உள்ளார். நேற்று ஷமியும் பஞ்சாப் அணிக்காக மிக சிறப்பாக பவுலிங் செய்தார். நடராஜனுக்கு போட்டியாக நிறைய பவுலர்கள் வந்துவிட்டனர்.
கட்டாயம்
இதனால் நடராஜன் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்திய அணியில் டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆட வேண்டும் என்றால் இன்னும் சிறப்பாக அவர் ஆட வேண்டும். எந்த தவறுக்கும் இடம் கொடுக்காமல் தொடர்ந்து துல்லியமாக நடராஜன் பவுலிங் செய்ய வேண்டும்.