ஐபிஎல் தொடர்
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.
நீடிக்கும் சிக்கல்
டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு தயாராகும் நோக்கில் அயல்நாட்டு அணிகள் சர்வதேச தொடர்களை ஏற்பாடு செய்து வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தங்களது வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. இதே போல வங்கதேச வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மீதமுள்ள நாடுகளுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
சூப்பர் அறிவிப்பு
இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு மகிழ்ச்சி செய்து ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணியை சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வருவதாக தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடரின் போது நியூசிலாந்து - பாகிஸ்தான் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வருவார்கள் எனக்கூறப்படுகிறது.
நியூசிலாந்து வீரர்கள்
நியூசிலாந்தை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பெரும் பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக கேன் வில்லியம்சன், ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதே போல மும்பை அணிக்கு ட்ரெண்ட் போல்ட்டும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கெயில் ஜேமிசன் ஆகியோர் முக்கிய வீரர்களாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.