ஏன்
புஜாரா மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் சிஎஸ்கேவால் ஏலம் எடுக்கப்பட்ட போதே மற்ற அணிகள் கைதட்டி அந்த முடிவை பாராட்டியது. சிஎஸ்கே அணியின் மாற்று ஒப்பனராக இவர் அணியில் எடுக்கப்பட்டார்.
பயிற்சி
சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட பின் சில நாட்கள் புஜாரா பயிற்சி மேற்கொண்டார். சிஎஸ்கே வீரர்களுடன் டிராவல் செய்தார். ஆனால் அதன்பின் புஜாராவை பெரிதாக வெளியே பார்க்க முடியவில்லை. தொடக்கத்தில் இவர் பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியானது.
வீடியோ
புஜாரா சிக்ஸ் அடிக்கும் வீடியோக்கள் வெளியானது. ஆனால் அதன்பின் புஜாராவை எங்கும் பார்க்க முடியவில்லை. ஏன் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் கூட பெவிலியலின் புஜாரா பெரிதாக தென்படுவது இல்லை. இவர் அணியுடன்தான் இருக்கிறாரா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மிகவும் அமைதியாக உள்ளார். தற்போது எல்லாம் பெரிதாக வலைப்பயிற்சியில் கூட இவர் ஆடுவது இல்லையாம்.
டெஸ்ட்
டெஸ்ட் வீரரை சிஎஸ்கே எடுத்தது ஏன் என்று இதனால் கேள்வி எழுந்தது. இதற்கு ஒரு பாஸ்ட் பவுலரை அணியில் எடுத்து இருக்கலாம். குறைந்தது பவுலிங் ரொட்டேஷன் மேற்கொள்ளும் வகையிலாவது ஒரு பாஸ்ட் பவுலரை அணியில் எடுத்து இருக்கலாம். மாறாக புஜாராவை அணியில் எடுத்து.. தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.