மைதானம்
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஒருவர் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியில் இந்த முறை 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆவார்.
சையது
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக இவர் சிறப்பாக ஆடினார். தமிழக அணி ஆடிய போட்டிகளில் இவர் பினிஷர் போல செயல்பட்டார். சையது முஷ்டாக் தொடரில் தமிழக அணி தோல்வி அடையும் என்று கருதிய போட்டியில் கடைசியில் களமிறங்கி அதிரடி காட்டி வெற்றிபெற வைத்தார்.
செம
குறைந்த பந்தில் மேட்சை மாற்றுவதுதான் இவரின் டெக்னீக். பாண்டியா, பண்ட் போல முதல் பாலில் இருந்து அதிரடியாக ஆடி சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்து இருப்பதுதான் ஷாருக்கானின் டெக்னீக் ஆகும். கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் இப்படி ஆட கூடிய வீரர்கள் யாரும் இல்லை.
ரசல்
பஞ்சாப் அணியில் பினிஷ் செய்ய யாரும் இல்லை. இந்த முறை மேக்ஸ்வெல்லும் இல்லை. இதனால் மேக்ஸ்வெல் இடத்தில் ஷாருக்கான் களமிறங்குவார் என்கிறார்கள். கண்டிப்பாக ஷாருக்கான் இந்த முறை பேட்டிங் செய்வார் என்று கூறப்படுகிறது.
ஷாருக்கான்
ஷாருக்கானை கண்டிப்பாக களமிறக்க வேண்டும் என்ற முடிவில் பஞ்சாப் அணி நிர்வாகம் இருக்கிறது. இவருக்காக முக்கிய வீரர் ஒருவரை ஓரம்கட்ட கூட வாய்ப்புஉள்ளது இனிக்கிராகிறாள். இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களிலும் இவர் சிறப்பாக ஆடி உள்ளாராம். இவரின் பேட்டிங் பார்த்து பஞ்சாப் அணி நிர்வாகம் ஆடிப்போய் உள்ளது.
சிறப்பு
அதிரடியான பேட்டிங் ஸ்டைல் கொண்டு இருப்பதால் இவர்கள் அடுத்தடுத்துபஞ்சாபி அணியில் பேட்டிங் இறங்க வாய்ப்புள்ளது. மொத்தமாக அணி நிர்வாகத்தை போகசை ஷாருக்கான் தன் பக்கம் திருப்பி உள்ளார். இவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.