பஞ்சாப்
நேற்று தொடக்கத்திலேயே பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முதல் 6 ஓவரிலேயே பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் பஞ்சாப் அணியில் ஷாருக்கான் முருகன் அஸ்வின் மட்டுமே கொஞ்சம் நிலையாக ஆடிக்கொண்டு இருந்தனர்.
சரிவு
அணியை சரிவில் இருந்து மீட்டு, கொஞ்சம் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் 12 ஓவர்கள் முடிந்த பின் ஷாருக்கானும் அதிரடி காட்ட தொடங்கினார். கொஞ்சம் வேகமாக அடித்து ஆட தொடங்கினார்.
முருகன்
இந்த ஆட்டத்தின் போது முருகன் அஸ்வின் - ஷாருக்கான் இரண்டு பேரும் தமிழில் பேசி திட்டங்களை வகுத்தனர். இரண்டு பேரும் தமிழர்கள் என்பதால் மச்சான் பொறுமையா ஆடு, பிரச்சனை இல்லை பார்த்துக்கலாம்.. ஆப் சைட்ல போடுறாங்க, டிபன்ஸ் ஆடு என்று தமிழிலேயே திட்டங்களை வகுத்து பேட்டிங் செய்தனர்.
தமிழில் பேசினார்கள்
சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் யாரும் இல்லை. தமிழ் புரிய கூடிய ஒரே வீரரான ராயுடுவும் லாங் ஆனில் பீல்டிங் செய்தார். இதனால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று சிஎஸ்கேவால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவும் கூட இவர்களின் விக்கெட்டை நேற்று எடுக்க முடியாமல் சிஎஸ்கே அணி திணறியதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.