முதல் வெற்றி
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியை 120 ரன்களுக்குள் சுருட்டியது ஐதராபாத் அணி. இதன் பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து சுலபமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 63 ரன்களும், கேன் வில்லியம்சன் 16 ரன்களும் எடுத்தனர்.
இளம் வீரர்
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வீரர் அபிஷேக் சர்மா. சிறப்பாக செயல்பட்ட இவர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிடில் ஆர்டரில் ஹிட்டர்ஸாக களமிறங்கிய ஹென்ரிக்யூஸ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை எடுத்து உதவினார். இதனால் இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
புகழாரம்
இந்நிலையில் இவர் குறித்து பேசியுள்ள ரஷித் கான், அபிஷேக் சர்மா ஒரு நாள் இந்திய அணிக்கு சரியான ஆல் ரவுண்டராக திகழ்வார். சொந்த நாட்டிற்காக நிறைய போட்டிகளில் களமிறங்குவார். அவருக்கு அந்த திறமை மற்றும் கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
கற்றல்
தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அபிஷேக், நான் சிறுவயதாக இருக்கும் போது என் தந்தைதான் எனக்கு பயிற்சியாளர். அவர் ஒரு இடது கை ஸ்பின்னர். இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்த போது அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அந்த நம்பிக்கையைதான் நான் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினேன். தற்போது நான் ஆட்டத்தின் எந்த சூழலில் வேண்டுமானாலும் பந்துவீச தாயாராக இருப்பதாக நினைக்கிறேன்.