மாற்றம்
2021 ஐபிஎல் தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது. இந்தியாவில் இந்த தொடர் நடக்க உள்ளது. பிப்ரவரி 11ம் தேதி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரீடெயின் லிஸ்டை இன்றே ஐபிஎல் அணிகள் அளிக்க வேண்டும்.
லிஸ்ட்
தாங்கள் தக்க வைக்கும் வீரர்களில் லிஸ்டையும், வெளியிடும் வீரர்களின் லிஸ்டையும் இன்றே ஐபிஎல் அணிகள் அளிக்க வேண்டும். இந்த வீரர்களின் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை காலை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். 2021 ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகள் முக்கியமான வீரர்களை வெளியேற்றும் நிலையில் பெங்களூர் அணியில் இருந்து 9 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிரடி
இருந்து ஆரோன் பின்ச், உமேஷ் யாதவ், மெயின் அலி , சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், டெல் ஸ்டெயின், உடானா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக வெளிநாட்டு வீரர்கள் மட்டும் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இதனால் ஆர்சிபி பல புதிய வெளிநாட்டு வீரர்களை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
மாற்றம்
ஆர்சிபி அணியில் தற்போது விராட் கோலி, ஏ பிடி வில்லியர்ஸ், சாஹல், தேவ்தத் படிகள், வாஷிங்க்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி , ஆடம் சாம்பா, எஸ் அஹமது , ஜோஸ் ப்ளிப், கே ரிச்சர்ட்ஸன், தேஷ் பாண்டே ஆகியோர் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர் .
பார்ம்
முன்னதாக பெங்களூர் அணியில் இருந்து ஏ.பி.டி வில்லியர்ஸ் நீக்கப்படலாம் என்று செய்திகள் வந்தது. ஆனால் அவர் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது பெங்களூர் அணியிடம் 37.9 கோடி ரூபாய் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.