உறுதி
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு அணியை சேர்ந்த தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான தேவ்தத் பட்டிக்கல் அதிரடி காட்டினார். எனவே பெங்களூரு அணியில் தவிர்க்கமுடியாத ஒரு வீரராக தற்போது உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. ஆர்.சி.பி அணி தனது முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. எனவே தேவ்தத் பட்டிக்கல் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அக்ஷர் 2வது வீரர்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொரோனாவால் பாதிக்கப்படும் 3வது வீரர் தேவ்தத் பட்டிக்கல் ஆவார். இதற்கு முன்னர் நேற்று அக்ஷர் பட்டேலுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா அணியை சேர்ந்த நிதிஷ் ராணாவுக்கு கொரோனா உறுதியானது. இதில் நிதிஷ் ராணா 12 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டார்.
சிக்கல்
இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே கொரோனாவின் அச்சுறுத்தல் தொடங்கிவிட்டது. 3 வீரர்கள் மட்டுமின்றி ஐபிஎல் அதிகாரிகள் 8 பேருக்கும் சென்னை அணியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அதே போல மும்பை வான்கேடே மைதானத்தில் பணிபுரியும் 8 ஊழியர்களுக்கும் கொரோனா உறுதியானது.