ராஜஸ்தான்
இதில் ராஜஸ்தான் அணியில் ஆடி வரும் ரியான் பராக் சிறப்பாக பீல்டிங் செய்தார். சென்னை அணியில் ஜடேஜா பீல்டிங் செய்தது போலவே ரியான் லாங் ஆன், டீப் திசைகளில் பீல்டிங் செய்து வரிசையாக கேட்ச்களை பிடித்து வந்தார். இளம் வீரர்களில் ரியான் பராக் சிறப்பான பீல்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியான்
ஆனால் ரியான் பராக் நேற்று நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்தது. நேற்று மொத்தம் ரியான் பராக் 3 கேட்ச்களை பிடித்தார். டு பிளசிஸ், மொயின் அலி, ராயுடு என்று முக்கியமான மூன்று வீரர்களின் கேட்ச்களை பிடித்தார். இந்த கேட்ச்களை பிடித்துவிட்டு ரியான் கொஞ்சம் திமிராக அதை கொண்டாடினார்.கொஞ்சம் ஆணவமாக காணப்பட்டார்.
தவறு
அதேபோல் பந்தை பார்க்காமல், கொஞ்சம் சீன் போட்டபடி அதை ரியான் பராக் பிடித்தார். எப்படியும் பந்து கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி அவர் நடந்து கொண்டார். ரியான் பராக் இப்படி அசால்ட்டாக நடந்து கொண்டதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார். ரியான் பராக் இளம் வீரர்.. இப்போதே அவர் இவ்வளவு சீன் போட கூடாது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
விமர்சனம்
கோலி தொடக்க காலத்தில் இப்படித்தான் ஆக்ரோஷமாக இருந்தார். அதேபோல்தான் தற்போது ரியானும் செயல்படுகிறார். ரியான் கொஞ்சம் தன்மையோடு களத்தில் செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சனம் வைத்து வருகிறார்கள். அதே சமயம் ரியான் கொஞ்சம் திமிராக செயல்பட்டாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.