அழைப்பு
இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தற்போது டி வில்லியர்ஸ் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், ஏபிடி இப்போதும் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் சர்வதேச லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். அவரிடமே இதை பற்றி மெசேஜ் செய்து குறிப்பிட்டேன்.
சிறப்பு
நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள். ஐபிஎல்லில் நீங்கள் எப்போதும் போல ஆடுங்கள் என்று மெசேஜ் செய்தேன். ஐபிஎல் தொடருக்கு முன்பாக இப்படி குறிப்பிட்டேன். ஐபிஎல் தொடர் முடிந்ததும் அவரின் ஆட்டம் குறித்து பேசுவேன்.
மெசேஜ்
அவருக்கு மீண்டும் மெசேஜ் செய்வேன். அணியில் அவருக்கான இடம் இன்னும் திறந்தே இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் அவர் இப்போது சிறப்பாக ஆடலாம். அவரின் ஆட்டத்தை மீண்டும் தென்னாபிரிக்க அணியில் காண ஆவலோடு இருக்கிறேன்.
டி 20 அணி
தென்னாப்பிரிக்க டி 20 அணியில் அவர் இணையலாம், அவரை வரவேற்க நாங்கள் தயார் என்று பயிற்சியாளர் மார்க் கூறியுள்ளார். இவரின் இந்த திடீர் அழைப்புக்கு பின், ஏபிடியின் சமீபத்திய பார்ம் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஆர்சிபி
ஏபிடி ஆர்சிபி அணியில் சிறப்பாக ஆடி வருகிறார்.. முதல் ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிராக ஆர்சிபி வெல்ல ஏபிடிதான் காரணம். இதனால் டி 20 உலகக் கோப்பை தொடரில் இவரை தென்னாபிரிக்க அணியில் இறக்கலாம் என்று அணி நிர்வாகம் நினைக்கிறது.