முக்கியம்
இந்த போட்டியில் முதல் பாலில் இருந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார். வெற்றிதான் முக்கியம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேட்டிங் செய்தார். முதல் பாலில் இருந்து சஞ்சு சாம்சன் பொறுப்போடு ஆடினார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இன்று சஞ்சு சாம்சன் முதல் முறையாக களமிறங்கினார். முதல் போட்டியே பரம் வைரியான பஞ்சாப் அணியுடன் நடந்தது.
பஞ்சாப்
பஞ்சாப் அணியும் இன்று அதிரடியாக ஆடி 221 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் ராகுல் 91, ஹூடா 64 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்கள். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மட்டுமே தனியாக போராடினார். ஸ்டோக்ஸ் சரியாக ஆடவில்லை
பார்ட்னர்ஷிப்
பட்லர், துபே, ரியான் பராக் எல்லாம் சின்ன சின்ன கேமியோ மட்டுமே கொடுத்தனர். யாரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதிகம் நம்பிய திவாதியா பெரிதாக ஆடவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் மட்டும் கேப்டனாக நின்று அதிரடியாக ஆடினார். ஸ்பின், பாஸ்ட் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரின் ஓவரில் அடித்து வெளுத்தார்.
செம
அதிலும் பிபிஎல் போட்டிகளில் நன்றாக பவுலிங் செய்த ஜெய் ரிச்சரசனையும், மெரிடித்தையும் அசால்ட்டாக டீல் செய்தார். மொத்தம் 63 பந்துகள் பிடித்த சஞ்சு 119 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் இதுதான் சஞ்சுவின் பெஸ்ட் ஸ்கோர். இதில் 7 சிக்ஸ், 12 பவுண்டரிகள் அடக்கம். ஒரு கேப்டனாக முதல் போட்டியிலேயே ஐபிஎல்லில் சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான்.
சதம்
கடைசி பந்து வரை அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி பந்தில் அவுட்டாகி சஞ்சு சாம்சன் அதிர்ச்சி அளித்தார். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெல்லவில்லை என்றாலும் சஞ்சு சாம்சன் கிரிக்கெட் கெரியரில் இன்றைய நாள் ஆட்டம் மிகப்பெரிய மைக்கல்லாக இருக்கும்.