மீண்டும் சொதப்பல்
கொல்கத்தா அணி மீண்டும் டாப் ஆர்டரில் படு சொதப்பல் செய்தது. தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணா 22 ரன்கள், சுப்மன் கில் 11 ரன்களுக்கு வெளியேறினர். பின்னர் வந்த அதிரடி வீரர்கள் மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸல், பேட் கம்மின்ஸ் ஆகியோர் கிறிஸ் மோரிஸின் வேகத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி மட்டுமே 36 ரன்கள் எடுத்தார்.
படுதோல்வி
இதனையடுத்து குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி பட்லர் 5 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் சொதப்பினார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம்சன் 41 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். இதனால் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக பெறும் 4வது தோல்வி இதுவாகும்.
மோர்கன்
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கேப்டன் மோர்கன், எங்கள் அணியில் பேட்டிங் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம். இன்னிங்ஸ் முழுவதும் எங்களிடம் சிறப்பான பேட்டிங் வெளிப்படவில்லை. குறைவான ஸ்கோரை அடித்துவிட்டு பவுலர்களிடம் அதிக பிர்ஷர்களை போட முடியாது.
பிட்ச் மோசம்
வான்கடே மைதானம் எப்போதும் இருப்பது போன்று நேற்று இல்லை. பேட்டிங்கிற்கு சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அடித்து ஆட முயன்ற போது விக்கெட்டை இழக்கிறோம். ஆனால் ராஜஸ்தான் அணி இந்த பிட்ச்-க்கு நன்கு பழகிவிட்டனர்.
மோர்கன் குற்றச்சாட்டு
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடாமல் லோ ஆர்டரில் இருக்கும் எனக்கு, தினேஷ் கார்த்திக், ரஸலுக்கு அதிக வேலையை வைத்துவிட்டு செல்கிறார்கள். ஆனால் அது எங்களால் தொடர்ந்து செய்யமுடியாத ஒன்று. நாங்கள், அனைத்து வீரர்களும் எந்த பிரஷரும் இன்றி விளையாட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நேற்றைய போட்டியில் நிச்சயமாக அது இல்லை.