நடராஜனுக்கு கொரோனா
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு காரணம் தமிழக வீரர் டி.நடராஜன். நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய நடராஜனுக்கு கொரோனா உறுதியானது. இதனால் நடராஜனும் அவருடன் தொடர்பில் இருந்து விஜய் சங்கரும் நேற்றைய போட்டியில் பங்குபெறவில்லை.
படுதோல்வி
இதன் காரணமாக பந்துவீச்சில் ஐதராபாத் அணி திணறியது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி வழக்கம் போல தொடக்கத்தில் இருந்தே தனது அதிரடியை காட்டியது. தொடக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இவர்களை எந்த பவுலராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே டி.நடராஜன் விரைவாக அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.
பயிற்சியாளர்
இந்நிலையில் இதுகுறித்து அணி பயிற்சியாளர் ட்ரேவர் பெய்லிஷ் பேசியுள்ளார். அதில் அவர், நடராஜன் இல்லாததால் தான் ஐதராபாத் அணி தோற்றது என்பதை நான் ஏற்கமாட்டேன். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமானது. டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. உலக தரம் வாய்ந்த பவுலர்களை அவர்கள் வைத்திருந்தனர்.
மீண்டு வருவோம்
நடராஜன் ஒருநாள் விளையாடுவார். ஆனால் தற்போது இருக்கும் வீரர்களும் சிறப்பானவர்களே. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் காயம் காரணமாக மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். அதனை இந்த அணி எளிதாக கடந்து செல்லும். வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் விரைவில் குணமடைந்து வருவார். ஐதராபாத் அணி மீண்டு வரும் எனத் தெரிவித்துள்ளார்.