டெல்லி கேப்டன்
இளம் வீரரான ரிஷப் பண்ட் எப்படி அணியை கையாளப்போகிறார், அவருக்கு என்ன தகுதி உள்ளது என எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும் ரிஷப் பண்ட் பதிலடி கொடுத்தார். தொடரில் தோனி மற்றும் விராட் கோலியின் அணிகள் இருந்த போதும் அவற்றை அடித்து நொறுக்கிவிட்டு புள்ளிப்பட்டியலில் டாப்பில் உட்கார்ந்தது டெல்லி அணி.
சோர்வு
இந்நிலையில் பண்ட்-ம் கேப்டன்சி குறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வருவார் என தெரிவித்துள்ளார்.6 போட்டிகளுக்கு மேல் அவரின் கேப்டன்சியை பார்த்தபோதும், பண்ட்-டிடம் தொடர்ந்து கேப்டன்சி குறித்த கேள்விகளே கேட்கப்பட்டது. போட்டிக்கு பின்னர் தொகுப்பாளர்கள் அதனை பற்றியே கேட்டது அவருக்கு சோர்வை ஏற்படுத்தியது.
தீயாக மாறுவார்
ரிஷப் பண்ட் கேப்டன்சியில் சில தவறுகள் செய்தார் தான். ஆனால் எந்த கேப்டன் தான் தவறு செய்யவில்லை. இந்த ஐபிஎல்-ல் அவர் காட்டியது சாதாரண தீ பொறி தான். அவரின் போக்கிலேயே விட்டுவிட்டால் அது ஒருநாள் பெரும் தீயாக மாறும். அவர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள தகுதியானவர். தனக்கென தனி திட்டங்களை வகுத்து அதன்படி அணியை வழிநடத்தி செல்கிறார்.
இந்தியாவின் எதிர்காலம்
இந்திய அணியின் எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக அவர் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இந்த தொடரில் அவரின் அப்படி ஒரு திறமையை வெளிப்படுத்தினார். அவர் தனது மனநிலையையும் பொறுமையையும் சரியாக கடைபிடித்தால் மிகப்பெரும் வாய்ப்புகள் அவருக்கு உள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.