தனிமைப்படுத்தப்பட்டார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட படிக்கல் தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். ஒரு வாரத்தில் குணமடைந்த படிக்கல் மீண்டும் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார். பெங்களூர் வீரர்களுடன் படிக்கல் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
எப்படி
ஆனால் ஐபிஎல் விதிப்படி கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த வீரர் 7 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா குணமானாலும் கூட அந்த வீரர் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். ஆனால் படிக்கல் இப்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.
குணம் ஆனார்
கொரோனா குணமான மறுநாளே அவர் பெங்களூர் அணியோடு இணைந்துவிட்டார். பெங்களூர் அணியும் இவருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இதுதான் தற்போது மற்ற 7 ஐபிஎல் அணிகளை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
விதி
இவரை எப்படி தனிமைப்படுத்தாமல் மீண்டும் உள்ளே அனுப்ப முடியும். இவரை 7 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி எப்படி இவரை நேராக அணிக்குள் சேர்த்தனர்.
மருத்துவமனை
இவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக வருகிறார். இவரை அணியில் சேர்த்தது தவறு என்று 7 அணிகளும் புகார் வைத்துள்ளன. பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பிடம் புகார் வைத்ததாக தகவல்கள் வருகின்றன.