பஞ்சாப்
பஞ்சாப் அணியில் ஓப்பனிங் இறங்கிய மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய ராகுல் ஜடேஜா மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். பின் கெயில் 10 ரன்கள், தீபக் ஹூடா 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். நிக்கோலஸ் பூரான் டக் அவுட் ஆனார்.
ஷாருக்கான்
இதையடுத்து களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடினார். அவசரமாக ஆடி அவுட் ஆகாமல், முதல் 10 பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். ஆனால் அதற்கு பின் ஷாருக்கான் வேகம் எடுக்க தொடங்கினார்.
ஷாருக்கான் அதிரடி
10 பந்துகளை பின் அதிரடி காட்டிய ஷாருக்கான் பொறுப்பை உணர்ந்து தேவையான பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து வெளுத்து அசத்தினார். சக தமிழக வீரர் முருகன் அஸ்வினுடன் பிளான் போட்டு ஷாருக்கான் வெளுத்து வாங்கினார்.
விக்கெட்
மற்ற வீரர்களின் விக்கெட்டை எளிதாக எடுத்த நிலையில் ஷாருக்கான் விக்கெட்டை மட்டும் எடுக்க முடியாமல் சிஎஸ்கே திணறியது. இவருக்கு எப்படி பவுலிங் போட்டாலும் விக்கெட் எடுக்க முடியாமல் சிஎஸ்கே திணறியது. மற்ற வீரர்கள் எல்லோரும் அவுட் ஆன நிலையில் ஷாருக்கான் மட்டும் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்தார்.
ஓப்பனிங்
36 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 47 ரன்கள் எடுத்து ஷாருக்கான் அவுட் ஆனார். ஷாருக்கான் இதன் மூலம் தன்னை சிறந்த பினிஷர் என்று நிரூபித்துள்ளார். சையது முஷ்டாக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ஷாருக்கானை பஞ்சாப் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.