ஏமாற்றம்
கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்திதான் இந்த இரண்டு விக்கெட்டையும் எடுத்தது. வருண் சக்ரவர்த்தி வீசிய இரண்டாவது பந்திலேயே கோலி விக்கெட்டை எடுத்தார். கோலிக்கு கேரம் பால் போட்டு அவரை விக்கெட் எடுத்தார். இதை பார்த்து கோலியே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.
அதிர்ச்சி
இதையடுத்து அதே ஓவரில் படித்தார் விக்கெட்டையும் வருண் எடுத்தார். பட்டிதார் பொதுவாக ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆடுவார். ஆனால் அவரிடம் மிஸ்டிரி ஸ்பின் பவுலிங்கை வீசி, வருண் விக்கெட் எடுத்தார். ஒரே ஓவரில் ஆர்சிபியின் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை தமிழகத்தை சேர்ந்த வருண் விக்கெட் எடுத்துள்ளார்.
எதிர்பார்க்கவில்லை
வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் தேர்வாகி பின் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் இங்கிலாந்து தொடரில் பிட்டாக இல்லை என்று கூறி நீக்கப்பட்டார். பிட்னஸ் டெஸ்டில் வருண் அப்போது தோல்வி அடைந்துவிட்டார். இதில் வருணை கோலி நேரடியாக விமர்சனமும் செய்திருந்தார்.
விமர்சனம்
அதில், இந்திய அணியில் ஆட வேண்டும் என்றால் ஃபிட்டாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆட கூடாது என்று வருணை கோலி விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் கோலி வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் தற்போது வருண் சக்ரவர்த்தி அதிரடியாக ஒரே ஓவரில் பதிலடி கொடுத்துள்ளார்.