விக்கெட்
ஆனால் பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர்கள் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. நேற்று பஞ்சாப் அணிக்காக ஆடிய ஜெய் ரிச்சர்தான், ரைலி மெரிடித் இருவரும் பெரிய அளவில் சரியாக ஓவர் வீசவில்லை. தொடர்ந்து ஜெய் ரிச்சர்ட்ஸன் ரன்களை வாரி வழங்கிய நிலையில் திடீரென அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த ஜோஸ் பட்லரை விக்கெட் எடுத்தார்.
ஸ்லோ பால்
சிறப்பான ஸ்லோ பால் யார்க்கர் மூலம் பட்லரை ரிச்சர்ட்சன் விக்கெட் எடுத்தார். இந்த விக்கெட் ரிப்ளேயின் போதுதான் கிரிக்கெட் பந்தில் நீல நிறத்தில் எதோ முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை பந்து என்பதால், இந்த நீல முத்திரை அப்பட்டமாக தெரிந்தது.
நீலம்
பந்தில் என்ன நீல கலரில், எப்படி நீல முத்திரை பந்தில் வந்தது, ஒன்னும் புரியலையே என்று இதை பார்த்த ரசிகர்கள் பலர் குழப்பமாக கேட்டனர். பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சந்தேகமாக கேட்டனர். இந்த நிலையில் இது பந்தில் இருக்கும் ஸ்பான்சர் முத்திரை என்று கூறப்படுகிறது.
சந்தேகம்
பொதுவாக பவுலிங்கின் போது பந்தில் ஒரு பக்கத்தை தேய்த்துக்கொள்ள அனுமதிக்கப்படும், இன்னொரு பக்கத்தை புதிதாக வைத்திருக்க வேண்டும். இதில் நீல முத்திரை இருக்கும் பகுதி தேய்க்கப்படாத ஸ்டிக்கர் இருக்கும் பகுதியாகும். இன்னொரு பக்கம் தேய்க்கப்பட்டதால்.. இந்த நீல நிறம் தனியாக தெரிகிறது.
மோசம்
பந்தை மிகவும் சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே இப்படி ஒரு பக்கம் நல்ல பளபளப்பாக தனியாக தெரியும். நேற்று ராஜஸ்தான் வீரர்கள் பந்தை நன்றாக பயன்படுத்தி உள்ளனர். அதனால்தான் ஒரு பக்கம் இருந்த முத்திரை கூட அழியாமல் அப்படியே தெரிந்தது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
வைட் லைன்
அதே சமயம் இந்த நீல நிறம் வைட் லைனில் போடப்பட்டு இருந்த பெயின்ட் காரணமாக வந்தது இருக்கலாம். பொதுவாக வைட் லைனில் வெள்ளை நிற பெயிண்ட் இருக்கும். ஆனால் நேற்று நீல நிற பெயிண்ட் இருந்தது. இது ஒருவேளை பந்தில் ஒட்டி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.