நடராஜன்
ஹைதராபாத் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவராக நடராஜன் இருந்தார். கடந்த போட்டியில் கூட நடராஜன் நன்றாக பவுலிங் செய்தார். ஸ்பின் பவுலர்கள் அதிக ரன்களை கொடுத்த போது நடராஜனை அழைத்துதான் வார்னர் ரன்களை கட்டுபடுத்த சொன்னார்.
ஏன்
முதல் போட்டியிலும், இரண்டாம் போட்டியிலும் வார்னர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனாலும் இன்று நடராஜன் ஒதுக்கப்பட்டு இருக்கிறார். வார்னரின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
வார்னர்?
நடராஜனுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் வார்னர் அவரை நீக்கி இருக்கலாம் என்கிறார்கள். சென்னை பிட்சில் ஸ்லோ பால் வீச வேண்டும். அதிகமாக கட்டர்களை வீச வேண்டும். கடந்த போட்டியில் கூட நடராஜனிடம் கட்டர்களை வீசும்படி வார்னர் கூறினார்.
சென்னை
ஆனால் சென்னை பிட்ச் நடராஜனுக்கு பெரிதாக ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரால் பெரிதாக ஆட முடியாது என்பதால் அவரை சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டும் அவரை வார்னர் ஒதுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
காரணம்
பவுலிங் ரீதியாக நடராஜன் தவறு எதுவும் செய்யவில்லை. அவரின் லைன் மற்றும் லென்த் நன்றாகவே இருந்தது. இது தொடர்பாக விளக்கி உள்ள ஹைதராபாத் இயக்குனர் டாம் மூடி, நடராஜனுக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறோம். தொடர்ந்து பல போட்டிகளில் ஆடி வருவதால் ஓய்வு கொடுத்துள்ளோம், நடராஜனை நீக்கவில்லை என்று கூறியுள்ளார்.