தவறு
இந்த சீசனில் கேப்டன் வார்னரின் முடிவுகள் எல்லாம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முக்கியமாக வார்னர் தொடக்கத்தில் கேன் வில்லியம்சனை ஓரம்கட்டியது சர்ச்சையானது. பின்னர் வெளிநாட்டு வீரர்களை அவர் பயன்படுத்திய விதமும் சர்ச்சையானது.
சர்ச்சை
இதனால் வார்னருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் மோதல் வந்தது. முக்கியமாக அணி தேர்தல் வார்னருக்கும் மேனேஜ்மென்டிற்கும் இடையில் சண்டை வந்தது. இதையடுத்து தற்போது ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீக்கம்
முன்னதாக, தொடர்ந்து மோசமாக சொதப்பி வந்ததால் ஹைதராபாத் அணியில் இருந்து மணீஷ் பாண்டே நீக்கப்பட்டார். இது டேவிட் வார்னரின் விருப்பம் இன்றி நடந்ததாக என்று கூறப்படுகிறது. மணீஷ் பாண்டேயின் நீக்கத்தை வார்னர் விரும்பவில்லை என்கிறார்கள். இதை வார்னரே நேரடியாக குறிப்பிட்டார்.
வார்னர் பேச்சு
இது குறித்து பேசிய வார்னர், மணீஷ் பாண்டேவை ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை. அவர் நல்ல பேட்ஸ்மேன். தேர்வாளர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார். அப்போதே அணி நிர்வாகத்திற்கும் இவருக்கும் இடையில் மோதல் வந்ததாக கூறப்பட்டது.
மோதல்
தற்போது இந்த மோதல் பெரிதாகவே ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்தே வார்னர் நீக்கப்பட்டுவிட்டார் என்கிறார்கள். இந்த மோதல்தான் வார்னரின் நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வார்னரின் முடிவுகளை ஹைதராபாத் அணி நிர்வாகம் விரும்பவில்லை.
அணி தேர்வு
முக்கியமாக அவரின் அணி தேர்வை ஹைதராபாத் அணி நிர்வாகம் விரும்பவில்லை. இதனால் அவரை அந்த அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. பாதி தொடரில் இப்படி ஹைதராபாத் அணியின் கேப்டன் நீக்கப்பட்டது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.