ஆர்சிபி திட்டம்
ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் இருக்கும் ஆர்சிபி அணி இந்தாண்டு ஏலத்தில் தீவிர கவனம் செலுத்துகிறது. அந்த அணி தற்போது விராட் கோலி ( ரூ.15 கோடி), மேக்ஸ்வெல் ( ரூ.11 கோடி), முகமது சிராஜ் ( ரூ.7 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. அந்த அணியின் முக்கிய ஸ்பின்னரும், கோலியின் நம்பிக்கை வீரருமான யுவேந்திர சஹால் இந்த முறை கழட்டிவிடப்பட்டுள்ளார்.
மாற்று வீரர் யார்?
இந்நிலையில் சஹாலுக்கு மாற்று வீரராக இளம் வீரர் ஒருவரை பெரும் பணத்தை கொடுத்து எடுக்க ஆர்சிபி குறிவைத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் மிகச்சிறந்த ஸ்பின்னரான சாஹால், மெகா ஏலத்திற்கு முன்பே புதிய அணிக்கு சென்றுவிடுவார். ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்டான சின்னசுவாமி மைதானத்தில் லெக் ஸ்பின்னர்களால் மட்டும் தான் சிறப்பாக செயல்பட முடியும். எனவே சாஹலுக்கு பதிலாக ராகுல் சஹார் தான் சரியான தேர்வாக இருப்பார்.
என்ன காரணம்
ரஷித் கான் ஏற்கனவே புதிய அணியால் குறிவைக்கப்பட்டார். அதனால் ஆர்சிபி அணி அவரை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ராகுல் சஹாரை எவ்வளவு பணம் செலவளித்தாவது வாங்கிவிட ஆர்சிபி அணி முணைப்பு காட்டும். அவருக்கு அடுத்தபடியாக பார்த்தால் ரவி பிஸ்னாய் நல்ல தேர்வாக் இருப்பார். ஆனால் ராகுலை எடுப்பது சிறந்தது.
கேப்டன் யார்?
இதே போல ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதில் அவர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் தான் ஆர்சிபியின் கேப்டன்சி பதவிக்கு வருவார் என நினைகிறேன். சின்னசாமி பிட்ச் மற்றும் கேப்டன்சி திறமைகள் என பலவற்றையும் வைத்து பார்த்தால் ஹோல்டரை தான் ஆர்சிபி குறிவைக்கும். அவர் இதற்கு முன்னர் கேப்டனாக பல வெற்றிகளை கண்டுள்ளார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.