ஐபிஎல் ஏலம்
இதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனென்றால் சிஎஸ்கேவை வயதானவர்களின் அணி என விமர்சனங்கள் உள்ளன. இந்த முறை இளம் வீரர்களை அதிகளவில் எடுக்குமா அல்லது அனுபவம் மிகுந்த வீரர்களை எடுக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன.
சிஎஸ்கே திட்டம்
இந்நிலையில் ஓய்வு வயதில் இருக்கும் ஒரு வீரரை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வரை அந்த அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்த ஃபாப் டூப்ளசிஸ் தான் அது. ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட்டுடன் சேர்ந்து அவர் அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே பல வெற்றிகளுக்கு காரணமானது.
அகாஷ் சோப்ரா கருத்து
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணி வயதை பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்ளும் அணி அல்ல. ருதுராஜுடன் சேர்ந்து டூப்ளசிஸ் நல்ல ஜோடியாக அமைந்துவிட்டார். எனவே அதனை அப்படியே வைத்துக்கொள்ளவே அணி நிர்வாகம் விரும்புகிறது. அவரால் நீண்ட காலம் கிரிக்கெட் ஆட முடியாது. எனினும் அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கும் எனக்கூறியுள்ளார்.
டூப்ளசிஸ் வயது
37 வயதாகும் டூப்ளசிஸ் கடந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருந்தார். அவர் 633 ரன்களை விளாசியுள்ளார். முதலிடத்தில் டூப்ளசிஸின் ஓப்பனிங் ஜோடியான ருதுராஜ் கெயிக்வாட் 635 ரன்களுடன் ஆரஞ்ச் கேப்பை தட்டிச்சென்றார். எனவே இவர்கள் ஆடுவதை மீண்டும் பார்க்க சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.