கோலி போட்ட கண்டிஷன்
இந்நிலையில் அதனுடன் சேர்ந்து மற்றொரு முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதாவது விராட் கோலியிடம் அணியின் புதிய வடிவம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில், டிவ்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவேண்டும் என கோலி கோரியுள்ளார். ஆர்சிபியை பற்றி நன்கு தெரிந்த ஒரு நபர் அணியின் ஆலோசகராக அல்லது பேட்டிங் கோச்சாக வந்தால் பெரும் உதவியாக இருக்கும் எனக்கேட்டுள்ளார்.
கோலி போட்ட கண்டிஷன்
இந்நிலையில் அதனுடன் சேர்ந்து மற்றொரு முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதாவது விராட் கோலியிடம் அணியின் புதிய வடிவம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில், டிவ்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவேண்டும் என கோலி கோரியுள்ளார். ஆர்சிபியை பற்றி நன்கு தெரிந்த ஒரு நபர் அணியின் ஆலோசகராக அல்லது பேட்டிங் கோச்சாக வந்தால் பெரும் உதவியாக இருக்கும் எனக்கேட்டுள்ளார்.
நிர்வாகம் எடுத்த முடிவு
அதனை அணி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ஏ.பிடிவில்லியர்ஸ் இனி ஆர்சிபி ஆலோகராக செயல்படும் அறிவிப்பையும் வரும் மார்ச் 12ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
எப்படிபட்ட கம்பேக்
கடந்த 2011ம் ஆண்டு ஆர்சிபி அணிகாக அறிமுகமான டிவில்லியர்ஸ், கடந்தாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தில் இவரின் பெயர்தான் இடம்பெற்றிருக்கும். இப்படிபட்ட வீரர் ஆலோகராக வந்தால் அணிக்கு கூடுதல் பலம் என்பதில் சந்தேகமே இல்லை.