ப்ளே ஆஃப் சுற்று
வரும் மே 24ம் தேதி நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆனால் ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. போட்டி நடைபெறும் கொல்கத்தா நகரில் பலத்த மழை பெய்து வருகிறது. போட்டி நாளின் போதும் கடும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
புது விதிமுறைகள்
இந்நிலையில் தான் பிசிசிஐ புது விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கு ரிசர்வ் டே தரப்பட மாட்டாது. இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டேவாக மே 30ம் தேதி பயன்படுத்தப்படும். அதற்கும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
நிபந்தனைகள்??
ப்ளே ஆஃப் போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டால், 2 மணி நேரம் கூடுதலாக தரப்படும். அதாவது இரவு 9.40 மணிக்கு போட்டியை தொடங்கி முழு ஓவரையும் வீசிக்கொள்ளலாம். இதுவே இறுதிப்போட்டி என்றால் இரவு 10.10 மணிக்கு தொடங்கி முழு ஓவரையும் வீசலாம். 20 நிமிட இன்னிங்ஸ் பிரேக் மட்டும் 10 நிமிடமாக குறைக்கப்படும்.
அதிக பாதிப்பு இருந்தால்
மழை குறுக்கிட்டால், குறைந்தபட்சம் 5 ஓவர் வரையிலாவது ப்ளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி 11.56க்கு போட்டி தொடங்கி 12.50 க்கு போட்டி முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இறுதிப்போட்டியும் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால் நண்பகல் 12.26 மணிக்கு தான் போட்டி தொடங்கும்.
Recommended Video
5 ஓவரின் இல்லையென்றால்
ஒருவேளை கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தையும் தாண்டி போட்டி பாதிக்கப்பட்டால் ஒரே ஒரு சூப்பர் ஓவரை வைத்து ப்ளே ஆஃப் போட்டிகளின் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவும் நடக்கவில்லை என்றால் லீக் சுற்றின் முடிவில் யார் முன்னனி இடத்தில் இருக்கிறாரோ, அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இறுதிப்போட்டி மட்டும் மறுநாளன்று ஒத்திவைக்கப்படலாம்.