மெகா ஏலம்
ஐபிஎல் 2022 முதல் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 2022ம் ஆண்டு ஐபிஎல் முதல் 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட தொடராக மாறவிருக்கிறது. இந்த 2 அணிகளையும் எந்த நிறுவனம் வாங்கப்போகிறது, எந்த நகரத்தை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஐபிஎல் சிக்கல்
இதுமட்டுமல்லாமல் ஆட்ட முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது இருக்கும் முறைபடி பார்த்தால், 2 புதிய அணிகள் வந்தால் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக 94 ஆக உயரும். மேலும் கிட்டத்தட்ட 3 மாத காலங்கள் அதற்கு தேவைப்படும். எனவே போட்டிகளின் எண்ணிக்கையை 74 ஆக குறைத்து 60 நாட்களுக்குள் தடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
புது முறை
அதாவது, தற்போதைய விதிமுறை படி, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை லீக் போட்டியில் மோத வேண்டும். அதன் பின்னர் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும். ஆனால் புதிய நடைமுறையில், மொத்தம் உள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக ( தலா 5) பிரிக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் 2 முறை போட்டியிட்டு, புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
ஏலத்தில் மாற்றம்
இந்த 2 புதிய அணிகளுக்காக ஏல முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் எனக்கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Right to match
மேலும் இந்த மெகா ஏலத்தில் Right ot Match Card ஐ பயன்படுத்த முடியாது. RTM என்பது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணிகள் தாங்கள் விடுவித்த வீரரை மீண்டும் பழைய தொகைக்கே ஏலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறையினால் மற்ற அணிகளுடனான ஏல போட்டி குறையும். ஆனால் இதனையும் அடுத்தாண்டுக்கான ஏலத்தில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பிசிசிஐ-ன் இந்த நடவடிக்கையால் புதிதாக வரும் 2 அணிகளுக்கும் முன்னணி வீரர்கள் கிடைப்பார்க என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.