தோனி ஓய்வா?
இந்தாண்டு சென்னை அணிக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது. கேப்டன்சி குழப்பத்தால் இதுவரை 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே அடுத்தாண்டு சென்னை அணிக்காக தோனி மீண்டும் விளையாடுவாரா என்பது தான் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. ஏனென்றால் அவர் இந்தாண்டுடன் ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.
குழப்பத்தில் ரசிகர்கள்
தற்போது 41வயதை எட்டி வரும் தோனி, நடப்பாண்டு நல்ல ஃபிட்னஸுடன் தான் இருந்தார். அவரின் பழைய ஆக்ரோஷமான ஷாட்களை பார்க்க முடிந்தது. எனினும் இதுகுறித்து பேசியிருந்த அவர், அடுத்தாண்டு மஞ்சல் நிற ஜெர்ஸியில் வருவேன், ஆனால் எப்படி வருவேன் என குழப்பத்தை ஏற்படுத்தி சென்றார்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளது. இன்று பேசிய அவர், கண்டிப்பாக அடுத்த வருடம் விளையாடுகிறேன். சென்னையில் விளையாடாமல் விடைபெறுகிறேன் எனக்கூறுவது நியாயமாக இருக்காது. எங்களுக்கு நிறைய அன்பு கிடைத்த இடங்களில் மும்பையும் ஒன்று தான். ஆனால் இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்காது.
கம்பேக் தருவோம்
அடுத்த வருடம் அனைத்து அணிகளும் வெவ்வேறு மைதானங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். அப்போது ஒவ்வொரு மைதானத்திலும் நான் நன்றி கூறலாம். அடுத்த வருடம் தான் என்னுடைய கடைசி ஐபிஎல்- ஆக இருக்கலாம். ஆனால் என்ன நடக்கிறது என்பது யாரும் கணிக்க முடியாது. தற்போதைக்கு, நான் அடுத்தாண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் எனக்கூறியுள்ளார்.