ப்ளேயிங் 11 குழப்பம்
மொத்தம் 25 வீரர்களை எடுத்துவைத்துள்ள சிஎஸ்கே அணி ப்ளேயிங் 11ல் பேட்டிங்கை பலப்படுத்தும் நோக்கில் பெரிய காயை நகர்த்தியுள்ளது. இந்நிலையில் அதில் தான் பிரச்சினையே தொடங்கியிருக்கிறது. அதாவது அணியின் 8, 9, 10, 11 இடங்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
டாப் ஆர்டர் என்ன
ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வாய் ஆகியோர் களமிறங்குவார்கள். 3வது வீரராக மொயின் அலி, அம்பத்தி ராயுடு, கேப்டன் தோனி, ஜடேஜா என அடுத்தடுத்து வீரர்கள் ப்ளேயிங் 11க்கு பொருத்தமாக உள்ளனர். ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கும் ஷிவம் தூபே களமிறங்கலாம். இதில் ஜடேஜா மற்றும் மொயின் ஆகியோரே ஸ்பின்னர்களாக செயல்பட்டுவிடுவார்கள்.
லோயர் ஆர்டர்
இதனைத்தொடர்ந்து டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஆடம் மில்னே என 10 பேர் கொண்ட வரிசை சரியாக உள்ளது. ஆனால் கடைசி வீரராக பவுலர் மட்டும் போதும் என்று நினைத்தால் துஷார் தேஷ்பாண்டேவை சேர்ப்பார். மற்றொருபுறாம் இதே போல ராஜ்வர்தன் ஹங்கர்கேகரையும் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஏனென்றால் ராஜ்வர்தன் பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக இருப்பார். மெகா ஏலத்தில் போராடி இவர்களை ஸ்கெட்ச் போட்டுத்தூக்கியுள்ளனர்.
வெளியேறுவாரா பிராவோ
இந்த 2 இளம் வீரர்களும் சிஎஸ்கேவின் எதிர்காலமாக பார்க்கப்படுவதால் பிராவோ ஓரம் கட்டப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. கடந்த முறையே பிராவோவின் ஃபார்ம் மோசமாக இருந்ததால் சில போட்டிகளில் வெளியே உட்காரவைக்கப்பட்டார். எனவே இந்தமுறையும் அவரை நீக்கிவிட்டு இவர்கள் இருவரை பயன்படுத்தலாம்.
11 பேட்ஸ்மேன்கள்
ஒருவேளை இதுவே சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 ஆக அமைந்தால் இதனை விட பேட்டிங்கில் பலமான அணி எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் அந்த 11 வீரர்களுமே அதிரடி பேட்ஸ்மேன்களாக விளங்குகின்றனர். மேலும் பவுலிங்கிலும் தோனிக்கு 7 தேர்வுகள் வரை உள்ளன. இது மிகப்பெரிய பலமாகும்.
Recommended Video
சிஎஸ்கே ப்ளேயிங் 11 கணிப்பு
ருதுராஜ் கெயிக்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, ஷிவம் தூபே, பிராவோ, தீபக் சஹார்,