இங்கிலாந்து உத்தரவு
இதில் பங்கேற்கும் வீரர்கள் இங்கிலாந்துக்கு வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, பின்னர் பயிற்சி எடுக்க வேண்டும். இதனால் மே மாதம் பாதியிலேயே ஐ.பி.எல். போட்டியை முடித்து கொண்டு, இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அந்த நாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து உத்தரவு
இதில் பங்கேற்கும் வீரர்கள் இங்கிலாந்துக்கு வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, பின்னர் பயிற்சி எடுக்க வேண்டும். இதனால் மே மாதம் பாதியிலேயே ஐ.பி.எல். போட்டியை முடித்து கொண்டு, இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அந்த நாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீரர்கள் ஏமாற்றம்
ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் கிடைக்கும் சம்பளத்தின் சிறு பகுதியை தர வேண்டும் என்று இங்கிலாந்து வாரியம் வீரர்களுக்கு கூறியிருந்தது. தற்போது ஐ.பி.எல். தொடரிலிருந்து பாதியில் வர வேண்டும் என்றால், தங்களை எந்த ஐ.பி.எல். அணிகளும் ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து வீரர்கள் புலம்பி வருகின்றனர்
அட்டவணையில் மாற்றம்
இதே போன்று நியூசிலாந்து வீரர்களும் பாதியில் ஐ.பி.எல். போட்டியை விட்டு செல்ல நேரிடும். இதனால் என்ன செய்வது என்று ஐ.பி.எல். அணிகளும் யோசித்து வருகின்றனர். இதனால் ஐ.பி.எல். போட்டியை மே மாதத்தின் இறுதி வரை நடத்தாமல் 10 நாட்களுக்கு முன்பே முடிக்கும் மாதிரி அட்டவணையை தயாரிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.