ராஜஸ்தான் சொதப்பல்
ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 3 ரன்களுக்கு ஏமாற்றினார். எனினும் முதல் விக்கெட்டிற்கு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை தூக்கி நிறுத்தினார். 26 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த பட்லர் நிதானமாக ஆடி வந்தார். இதனால் 11 / 1 என இருந்த ஸ்கோர் 79/2 என மாறியது.
பட்லர் காட்டிய அதிரடி
சஞ்சு சாம்சன் சென்ற பிறகு விக்கெட்கள் மலமலவென சரிந்த போதும், அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் நிதானமாக தான் ஆடி வந்தார். 42 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அதன் பிறகு ருத்ர தாண்டவம் ஆடினார். 56 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்தார். இதனால் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்க வேண்டிய ராஜஸ்தான் அணி 188 ரன்களை குவித்தது.
Recommended Video
பட்லரின் அதிர்ஷ்டம்
பட்லர் இந்த அளவிற்கு ரன் குவிக்க ஹர்திக் பாண்ட்யா தான் காரணம். ஆட்டத்தின் 17வது ஓவரை யாஷ் தயால் வீச, அதில் ஆவுட்சைட் ஆஃப் திசையில் வந்த பந்தை லாங் ஆன் திசையில் பட்லர் தூக்கி அடித்தார். ஆனால் அங்கு தான் ஹர்திக் பாண்ட்யா நின்றிருந்தார். அழகாக வந்த கேட்ச்-ஐ அவர் பிடிக்க முன் நகர்ந்து ஓடி வந்தார். ஆனால் பந்து அவர் கையில் கூட படவில்லை.
|
கீழே விழுந்த பாண்ட்யா
ஓடி வந்த போது, புற்கள் ஈரப்பதமாக இருந்ததால், சறுக்கி திடீரென கீழே விழுந்தார். இதனால் பந்து அவரை தாண்டி பவுண்டரிக்கு சென்றுவிட்டது. முதுகு பகுதியில் நல்ல காயம் ஏற்பட்டதாக தெரிந்த போதும், அவர் அதிர்ஷ்டவசமாக எழுந்து சென்றார். அவருக்கு எந்தவித காயமும் இல்லை என தெரியவந்தது. அந்த கேட்ச்-ன் போது பட்லரின் ஸ்கோர் 43 ரன்கள் மட்டுமே. ஹர்திக்கின் சறுக்கல் பட்லரை 89 ரன்களை வரை கொண்டு சென்றுவிட்டது. இதுவே குஜராத் அணிக்கும் கடின இலக்கு வருவதற்கான காரணமாகும்.