ராஜஸ்தான் அணி தீவிரம்
புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருந்த ராஜஸ்தான் அணி முதல் குவாலிஃபையரில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்தது. அந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்ல இன்று கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும். இதே போல முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என ஆர்சிபி அணியின் படு தீவிரமாக உள்ளது. இதற்காக ஆர்சிபி ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
ஆர்சிபிக்கு இருக்கும் அதிர்ஷ்டம்
இந்நிலையில் ஆர்சிபியின் வெற்றியை தீர்மானிப்பது இலங்கை வீரர் ஹசரங்காவின் கையில் தான் உள்ளது. நடப்பு தொடரில் ராஜஸ்தானின் அதிக ஸ்கோர் அடித்த வீரராக இருப்பது ஜாஸ் பட்லர் தான். எனினும் அணியின் தூணாக இருப்பது சஞ்சு சாம்சன் தான். பட்லர் ஓப்பனிங்கில் ரன் குவித்தாலும், மிடில் ஆர்டரில் இருந்து இக்கட்டான சூழலிலும் அணியின் ஸ்கோரை வெற்றிகான இலக்கை நோக்கி கொண்டு செல்வது அவர் தான். தற்போது வரை 14 போட்டிகளில் 375 ரன்களை குவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுடைய பலம்
மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் அதிக ரன் குவிக்கிறார் என்பதற்கு காரணம் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் பலமாக உள்ளது தான். நடப்பு தொடரில் இதுவரை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 107 பந்துகளை சந்தித்துள்ள சாம்சன் 178 ரன்களை விளாசியுள்ளார். 5 முறை மட்டுமே அவுட்டாகியுள்ளார். ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரின் ஸ்டரைக் ரேட் 166.35 ஆக உள்ளது.
ஒருவரிடம் மட்டும் திணறல்
ஆனால் ஒருவரிடம் மட்டும் அவரின் பாட்ஷா பழிக்காது. ஆர்சிபி வீரர் ஹசரங்கா தான் அவர். டி20 கிரிக்கெட்டில் ஹசரங்காவுக்கு எதிராக 23 பந்துகளை சந்தித்துள்ள சஞ்சு சாம்சன் 5 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 18 ரன்களை மட்டுமே சஞ்சுவால் குவிக்க முடிந்தது. எனவே இன்று ஹசரங்கா vs சஞ்சு சாம்சன் இடையேயான போட்டி தான் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கவுள்ளது.