மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ஹங்கர்கேகருக்கு சிஎஸ்கே புதிய கௌரவம் ஒன்றை தந்துள்ளது. முதலில் விளையாட வாய்ப்பு தாங்க, அப்புறம் மற்றதை தரலாம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
ஆனால், அதற்கான முதல் படி தான் இது. ஹங்கர்கேகர் அண்டர் 19 கிரிக்கெட்டில் ஜொலித்தவர்.
ஆனால், நடப்பு சீசனில் 12 போட்டிகள் முடிந்தும், சிஎஸ்கே அணி ஒரு முறை கூட ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு தரவில்லை.
இதனால் ஹங்கர்கேகர் அதிரடியை பார்க்க முடியவில்லை என்று சிஎஸ்கே ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், ஒவ்வொரு விளையாட்டிலும் ஜெர்சியின் பின்னால் இருக்கும் நம்பர் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும்.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், கால்பந்தில் மெஸ்ஸி போன்றோர் 10ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடினார்கள். அந்த வகையில், 10ஆம் நம்பர் ஜெர்சியை ஹங்கர்கேகருக்கு வழங்கி சிஎஸ்கே அணி நிர்வாகம் கௌரவம் செய்துள்ளது.
இந்தாண்டே தோனி ஓய்வு??.. சுனில் கவாஸ்கர் சொன்ன முக்கிய தகவல்.. மும்பை போட்டியிலேயே தீர்மானம்!
இதனால் ஹங்கர்கேகர் செம மகிழ்ச்சியில் உள்ளார். இதே போன்று பிளே ஆப் கனவு அம்பேல் ஆனதால், எஞ்சிய 2 போட்டியில் ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு தர சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அவர் மட்டுமல்லாமல் ஹரி நிசாந்த், ஜெகதிசன் போன்ற வீரர்களுக்கும் சிஎஸ்கே வாய்ப்பு வழங்க உள்ளது.